Sunday 26 June 2011

சென்னையில் கூடிய ஈழ ஆதரவாளர்கள் கூட்டம்

சென்னையில் கூடிய ஈழ ஆதரவாளர்கள் கூட்டம்

எண்பதுகளில், நான் சிறுவனாக இருந்த காலத்தில், ஈழ ஆதரவு கூட்டங்களில், அந்த எழுச்சியான ஊர்வலங்களில் கலந்துகொண்ட பிறகு, அதுவும் நீண்ட காலங்களுக்கு பிறகு, ஈழ ஆதரவிற்காக, தமிழின உணர்வோடு கூடிய ஒரு கூட்டத்தில் இன்று கலந்துகொண்ட மகிழ்ச்சியோடு, அதுகுறித்த சில தகவல்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்று சென்னையின் மெரினா கடற்கரையில் கூடபோகும் மனிதாபிமானமிக்க ஈழ ஆதரவாளர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருக்கும்போது, பட்டினப்பாக்கம் அருகில் இருசக்கர வண்டியில் வந்த ஒருவர் கேட்டார் கண்ணகி சிலை எங்கிருக்கு சார்?. உடன் புரிந்துகொண்ட நான் கேட்டேன், மெழுகுவர்த்தி ஏற்றுவதற்காக செல்கிறீர்களா? என்று. அவரும் அமாம் என்று பதிலளிக்க எனக்கொரு மகிழ்ச்சி அதில். நானும் அங்குதான் செல்கிறேன், எண்ணை பின்தொடர்ந்து வாருங்கள் என்று சொல்லி புறப்பட்டேன்.

கண்ணகி சிலை அருகில் வந்த எண்ணை, சாலை போக்குவரத்து காவல்துறையினர், வேறுவழியை காட்டி அங்குதான் உள்ளே போகமுடியும் என்று மீண்டும் திருப்பிவிட்டனர். இறுதியில், நேதாஜி சிலை பின்புறம் என் வாகனத்தை நிறுத்தினேன்.

பல சிறப்பான கூட்டங்கள் நடைபெற்ற சீரணி அரங்கிருந்த இடத்தில், அரசனிடமே நீதி கேட்டு போராடிய காப்பியத்தலைவி கண்ணகி சிலைக்கும், ஆங்கிலேயே அரசை எதிர்த்து போராடிய சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கும் இடையில், இன்றும் போராட்ட குணம் போய்விடவில்லை என நிருபிக்கும் வண்ணம் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர் தமிழின உணர்வாளர்கள்.

அருகில் சென்றபோது எனக்கு காத்திருந்தது அடுத்த ஆச்சர்யம். ஆமாம், அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கூடியிருந்தனர் அந்த இடத்தில். தற்போது ஈழ ஆதரவு உனர்வை குத்தகை எடுத்துள்ளதாக கருதும் ஒரு கட்சியின் கொடி தேவையில்லாமல் பறந்தது நெருடலாய் இருந்தது, பொதுவான இந்த உணர்வு ரீதியிலான கூட்டத்தில், கட்சி கொடியை தவிர்த்திருக்கவேண்டும் என்று பலரும் புலம்பியதை கேட்கமுடிந்தது.

புகைப்பட கருவி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி என ஆயத்தமாக சென்றிருந்த என்னிடம் ஒரு தோழர் காகித குவளையுடன் கூடிய மெழுகுவர்த்தியை கொடுத்து சென்றார். சிலர் ஈழ படுகொலையை கண்டித்து வாசகம் எழுதியிருந்த ஆடை அணிதிருந்தனர், சிலர் கருஞ்சட்டை அணிதிருந்தனர், வந்தவர்களில் பலர் இளைஞர்கள், பல பெண்களும் வந்திருந்தனர், சில பெண்கள் தங்களின் குழந்தைகளோடு வந்திருந்தனர், பல ஊடங்களின் செய்தியாளர்கள் வந்திருந்தனர், பல கட்சிகளின் தலைவர்கள் வந்திருந்தனர், அவர்களின் தொண்டர்கள் வந்திருந்தனர்.

நான் எண்பதுகளில் கண்ட கூட்டத்திற்கும், இன்று வந்திருந்திருந்த கூட்டத்திற்கும் இடையே ஒரு வித்தியாசம் இருந்தது. அன்று ஒரே எண்ணத்தோடு தமிழின உணர்வோடு மட்டும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இன்று, யாராவது அரசியல் பேசிவிடுவார்களோ? என்ற குழப்ப உணர்வோடு வந்திருந்தனர்.

இது யாரும் கூட்டிய கூட்டம் அல்ல, அனைவரும் உணர்வோடு கூடிய கூட்டம் என்பதால், எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல், கையில் ஏற்றிய மெழுகுவர்த்தியோடு தங்களின் தமிழின உனர்வை வெளிக்காட்டிவிட்டு அமைதியாய் கலைந்து சென்றனர் இனவுனர்வுள்ள தமிழர்கள்.

இந்த கூட்டம் யாருக்கு எதை தெரிவிக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்களுக்கு ஒரு செய்தியை நிச்சயம் தெரிவிக்கிறது. ஆம், எந்த அரசியல் கலப்பும் இல்லாவிட்டால், எப்படி தமிழக மக்கள் தானாக தங்களின் தமிழுணர்வை ஒற்றுமையாய் வெளிக்காட்டுவார்கள் என்பதை. ஈழ ஆதரவு உணர்வை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்திய தலைவர்கள், இன்றாவது உணரவேண்டும், ஈழ ஆதரவு உணர்வென்பது கட்சி பேதமில்லா உணர்வென்பதை. இன்று கூடிய கூட்டம் அதற்கொரு சான்று.

மொத்தத்தில், தமிழர்களின் இனஉணர்வு இன்று மெரினா கடற்கரையில் வெளிப்பட்டது.     

Friday 24 June 2011

குருகுல கல்வியாளர்கள் சமச்சீர் கல்வியை ஆராய்வதா???!!!

உயர்ஜாதியினருக்கு மட்டும் அறிவுபுகட்டவேண்டும், மற்றவர்கள் எல்லாம் அவரவர் குலத்தொழிலை செய்யவேண்டும். பிறப்பிலேயே இன்னார் இன்ன அறிவை மட்டும்தான் பெறமுடியும் என்ற நிலையில், உயர்ஜாதியினருக்கு மட்டும்  அறிவை புகட்டுவதற்காக குருகுலகல்வி இருந்தது.
இந்த பாரபட்சமான கல்விமுறையை முதலில் ஒதுக்கி, சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கும் சமமான கல்வி அளிக்கும் வழக்கத்தை முதன்முதலில் இந்தியாவில் தொடங்கியது கிருத்துவ தொண்டு நிறுவனங்கள். குருகுல கல்வியை ஒழித்து எல்லோருக்கும் சமமான கல்வியை மட்டுமல்ல, இன்றைய நவீன கல்வி முறைகளை அறிமுகபடுத்தியதும் கிருத்துவ கல்வியாளர்களே. நூறாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கல்விப்பணி ஆற்றிவரும் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் பல தமிழகத்தில் உள்ளன. உயர்ஜாதியை சேர்ந்த பல மாமா மாமிகள் இந்த நிறுவங்களில் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று அறிவு பெற்றவர்களே.
இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசால் நியமிக்கபட்டுள்ள சமச்சீர் கல்வியை ஆராயும் குழுவில், தொடர்ந்து பாரபட்சம் இல்லாமல், ஏழை எளிய மக்களுக்கும் கல்வி வழங்கும் கிருத்துவ கல்வியாளர்களை சேர்க்காமல், குருகுல கல்வியாளர்களை சேர்த்திருப்பது எந்த வகையில் நியாயம்?
இந்த குருகுல கல்வியாளர்கள் நடத்தும் பள்ளிகளில், உயர்ஜாதி மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் உயர்நிலையில் உள்ளவர்கள் மட்டுமே அதிகம் படிப்பதும், அங்கு உயர்ஜாதியை சேர்ந்தவர்களே ஆசிரியர்களாக அதிகம் இருப்பதும், அங்கு உயர்ஜாதி மாணவர்களுக்கு சிறப்பு கவனம் எடுத்துக்கொள்வதும் பலரும் அறிந்த உண்மை. 
பலகோடி மக்கள்தொகைகொண்ட தமிழகத்தில், பல கல்வி நிறுவங்களும், பல்கலைக்கழகங்களும், திறமையான கல்வியாளர்களும் அதிகம் நிறைந்த தமிழகத்தில், குறிப்பிட்ட உயர்ஜாதியை சேர்ந்த குருகுல கல்வியாளர்களை மட்டும் குழுவில் இணைத்திருப்பது என்பது, மற்றவர்களைவிட இந்த உயர்ஜாதியினரே அறிவில் சிறந்தவர்கள் என சித்தரிக்க முயல்வதும், குருகுலகல்வியாளர்களின் மறைமுக எண்ணங்களை அரசுவாயிலாக செயல்படுத்த முயல்வதுமான செயலாகும்.
குருகுலகல்வியாளர்களை நீக்கிவிட்டு, அனைவருக்கும் பொதுவான, மெத்த படித்த, அனுபவம் வாய்ந்த, துணைவேந்தர் போன்ற பொறுப்பில் இருந்த, திறமையான கல்வியாளர்களை குழுவில் இடம்பெறவைக்க, அனைத்துமட்டதிலிருந்தும் குரல் எழுப்பவேண்டும்.     

Monday 20 June 2011

கலைஞர் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சியும் மோடி ஆட்சியில் குஜராத்தின் வளர்ச்சியும்

07.04.11

இந்த தலைப்பில் எழுத வேண்டும் என்று தோன்றியதற்கு முக்கியமான காரணம், சமீபகாலத்தில் சிலர் குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடிதான் காரணம் என்பதும் சிலர் கலைஞரின் காலத்தில் ஏற்பட்டுள்ள தமிழகத்தின் வளர்ச்சியோடு ஒப்பிட முயல்வதும்தான்.

குஜராத்தின் வளர்ச்சியையும் தமிழகத்தின் வளர்ச்சியையும் ஒப்பிடுவதென்பது வண்டல் மண்ணில் விவசாயம் செய்வதையும் பாலை நிலத்தில் விவசாயம் செய்வதையும் ஒப்பிடுவதுபோலத்தான்.

இந்த இரு மாநில வளர்ச்சியை ஒப்பிடுவதற்கு முன்பு நாம் தெரிந்துகொள்ளவேண்டியது .

.           குஜராத்தில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன? தமிழகத்தில் எத்தனை பொதுத்துறை உள்ளன?

.           தமிழகத்தைவிட குஜராத்தில் பல மடங்கு அதிக பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன ஏன்?

.           தமிழகத்தில் எத்தனை உள்நாட்டு பன்னாட்டு நிறுவங்களின் தலைமை அலுவலகம் உள்ளது?

.           பெரும்பான்மையான உள்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அலுவலகம் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருப்பது ஏன்?

.           சேது சமுத்திர கால்வாய் திட்டம் முடக்கப்பட்டது ஏன்?

இப்படி பல கேள்விகளுக்கான பதில்களை தேடினால், இந்திய நாட்டில் நடக்கும் பல ஒருதலைபட்சமான ஓரவஞ்சனை செயல்களை அடையாளம் காண முடியும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சிலவற்றை காண்போம்.

.           பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் வடநாட்டை சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.

.           பல பெரிய நிறுவங்களின் அதிகாரிகள் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் வடநாட்டை சேர்ந்தவர்கள்.

.           தொழில் வளத்தை பெருக்கும் அமைச்சகங்களில் இருக்கும் அமைச்சரில் தொடங்கி முக்கிய அதிகாரிகளில் பலர் வடநாட்டை சேர்ந்தவர்கள்.

இப்படி பல்வேறு காரணங்களால் தென்னகத்தில் (தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி) மத்திய அரசாங்கத்தால் நிறுவப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இல்லை.

இந்நிலையில் இதையெல்லாம் தவிர ஒரு முக்கியமான ஒன்று தொழில் வளர்ச்சியில் மாநில வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. அது “இயற்கை எரிவாயு”.

இயற்கை எரிவாயு என்பது உரத்தொழில்சாலைகளுக்கு முக்கிய பங்காற்றுகிறது மேலும் அது சுத்தமான விலைகுறைந்த  எரிபொருள் என்பதால் அதன்மூலம் பல தொழிற்சாலைகள் இயங்கவும் குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கவும் முடியும்.

தென்னகத்தில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் அதன் எரிபொருளுக்கும் மின்சார தேவைக்கும் வெளிநாட்டிலிருந்து கரியை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றன. சில தொழிற்சாலைகள் மின்சாரம் தயாரிக்க வெளிநாட்டிலிருந்து நாப்தவை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக அதன் உற்பத்தி செலவு அதிகரிக்கிறது.

அதே சமயத்தில் குஜராத் மற்றும் மகாராஷ்ட்ராவில் அதன் கடல்பகுதியில் கிடைக்கும் எண்ணெய்வளம் தவிர்த்த இயற்கை எரிவாயுவை நேரடியாக அதன் தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலையில் அல்லது இலவச மானியமாகவோ தருகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் முதலீடு செய்பவர்களுக்கு குறைந்த உற்பத்தி செலவில் அதிக இலாபம் கிடைகிறது. இலாபம் கிடைக்கும் இடத்தில் முதலீடு செய்வது அதிகரிக்கும் என்பது இயற்கையே.

இந்திராகாந்தி காலத்தில் தனது மாநிலமான உத்திரபிரதேசதிற்கு மகாராஷ்ட்ராவில் இருந்து குழாய் மூலமாக ஒரு குறிப்பிட்ட அளவு இயற்கை எரிவாயு எடுத்து செல்ல வழிவகுத்தார்கள். இதன் மூலம் அங்கு உரத்தொழிற்சாலைகள் பெருகின.

தற்போது ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா கோதாவரி கடல் படுகையில் அதிக அளவில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்க பட்டு அதையும் ஒரு பெரிய தொழில் நிறுவனம் தனது குஜராத் மாநிலத்திற்கு குழாய் மூலம் எடுத்து செல்கிறது.

ஒரு அதிர்ச்சி தகவல் : குஜராத் என்ற ஒரு தனி மாநிலம் இந்தியாவின் மொத்த இயற்கை எரிவாயுவில் நாற்பது சதவிகிதத்தை எடுத்து பயன்படுத்துகிறது. தமிழகத்திற்கு ஒரே ஒரு சதவிகிதம் கூட கிடையாது.

இயற்கை எரிவாயு விஇசயத்தில் தென்னகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், ஓர் ஆண்டுக்கு முன்பு ஒரு நாள் நமது தமிழக முதல்வர் கலைஞர் கிருஷ்ணா கோதாவரி படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை தமிழகத்திற்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இது ஒரு சாதாரணமான செய்தியாக அன்று நமது பத்திரிக்கைகள் வெளியிட்டன. அடுத்த சில நாட்களில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தின் நோக்கம் கிருஷ்ணா கோதாவரி படுகை இயற்கை எரிவாயுவை தென்னகத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை பற்றி விவாதிக்க கருத்து பரிமாறிக்கொள்ள.

அந்த முக்கியமான கூட்டத்தில், தமிழகத்தின் தொழில் துறை செயலாளர், கேரளாவின் தொழில்துறை செயலாளர் (அவர் முதல்வர் அச்சுதானந்தன் அனுப்பி வைத்த வாழ்த்து செய்தியை வாசித்து காண்பித்தார்), ஆந்திர மாநில கேஜி பேசின் காஸ் கமிஷன் தலைவர், கர்நாடக மாநில பிரதிநிதி மற்றும் தென்னகத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள், அவர்களின் பிரதிநிதிகள், அறிவியல் அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் ஒரு மாநிலமே மொத்தமாக சுரண்டுவதையும் அதிலும் சில தொழில் குடும்பங்கள் அதிகமாக சுரண்டுவதையும், தென்னகம் தொடர்ந்து புறக்கணிக்க படுவதையும் இதனால் ஏற்படும் இலாப நட்ட கணக்குகளையும் பற்றி பேசினார்கள்.

இதில் ஒரு சுவையான ஆனால் அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளிவந்தது. திருபெரும்புதூரில் உள்ள ஒரு பெரிய பன்னாட்டு தொழில் நிறுவனத்தின் தலைவர் வருத்தத்தோடு குறிப்பிட்டது: இதே தொழிற்சாலையை நாங்கள் குஜராத்தில் அமைத்திருந்தால் எங்களுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் நூறு கோடி ரூபாய் அதிக இலாபம் வந்திருக்கும் என்ற ஆதாரத்துடன் கூடிய புள்ளிவிவரத்தை தந்தார். கூட்டம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது.

இதைவைத்து பல தொழில் நிறுவனங்களை குஜராத்தும் மகாராஷ்ட்ராவும் இழுத்துகொண்டிருந்த நிலையில், வேறுவழி இல்லாமல், தென்மாநிலங்கள் , உற்பத்தி சாராத தொழில்களான மென்பொருள், கால் சென்டர், தகவல் தொழில் நுட்பம் போன்ற அறிவு சார்தொழில்களில் கவனம் செலுத்தி அதில் வளர தொடங்கின.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் நமது முதல்வர் கலைஞர் என்ற திறமைசாலியின் செயல்பாடுகள் மெல்ல தொடங்கின. அரசியல் சூழலை பயன்படுத்தி மத்திய அரசில் பங்கெடுத்து முக்கிய துறைகளை பெற்று அதன் மூலமாக பன்னாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய ஏற்பாடு செய்தார். குஜராத் போன்று இலவச அல்லது குறைந்த விலை மின்சார/இயற்கை எரிவாயுவை தர இயலாத நிலையில், இலவச நிலங்கள் தருவது, உடனடி உரிமம் தருவது, அவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவது, பிரச்சனையற்றர் செயல்பாடுகளுக்கு உதவுவது போன்ற வழிகளில் பல பன்னாட்டு நிறுவனங்களையும் உள்ளூர் நிறுவனங்களையும் ஊக்கபடுத்தி தொழில்வளம் பெருக செய்தார். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் பெருகியது தனிநபர் வருமானமும் பெருகியது.

மெதுவாக காயை நகர்த்திய கலைஞர் சேது சமுத்திர திட்டம் நிறைவேற ஆவன செய்தார். விடுவார்களா நம் வட இந்திய பெருமுதலாளிகள்? அந்த திட்டம் நிறைவேறினால் நமது துறைமுகங்கள் வளரும், பல பன்னாட்டு சரக்கு கப்பல்கள் வந்து போகும், குஜராத்து மகாராஷ்டிரா துறைமுகத்தை விட பெரிய அளவில் நமது கடல் வணிகம் பெருகும். அதை எப்படி அந்த மாநிலத்தை சேர்ந்த பேரு முதலாளிகள், அரசியல்வாதிகள் விடுவார்கள்? எடுத்தார்கள் அவர்களது ராமர் பானத்தை எய்தார்கள் திட்டத்தின் மீது, முடக்கினார்கள் அந்த திட்டத்தை.

ஓயவில்லை வட இந்திய தொழில் அதிபர்களும் மோடியும். தமிழகத்திற்கு நேராகவந்த மோடி தன மாநில வசதிகளை எடுத்து சொல்லி இங்கிருக்கும் தொழில் அதிபர்களை அங்கு வந்து தொழில் தொடங்க கேட்டுகொண்டார். மேலும் மத்தியில் தி.மு.க அமைச்சரவையில் இடம் பெறாமல் இருப்பதற்கான அணைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.

இதில் கலைஞரின் சிறப்பு என்னவென்றால், குஜராத்தை போல எந்த வளமும் இல்லாமல், குஜராத்தை போல எந்த பெரிய உள்நாட்டு முதலீடும் இல்லாமல், குஜராத்தை போல எந்த மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் இல்லாமல், பன்னாட்டு முதலீடுகளை கொண்டுவந்து தமிழகத்தை தொழில்வளத்தில் முன்னேறிய முதன்மை மாநிலமாக மாற்றி இருக்கிறார்.

நண்பர்களே, இப்பொழுது சொல்லுங்கள், பாலைவனத்தை சோலைவனமாக மாற்றிகாட்டிய சாதனை பெரியதா? வண்டல் மண்ணில் விவசாயம் செய்து காண்பிப்பது பெரியதா? எது சாதனை? விதண்டவாதமும் அரசியலும் செய்யவிரும்பாத அனைத்து நடுநிலையாளர்களும் ஏற்றுகொள்வார்கள் கலைஞரின் சாதனை மிகபெரிது என்பதை.

ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கும் பெரியவர்

08.04.11

இவர் அறுபத்தி மூன்று ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்? நிச்சயமாக கோமா நிலையிலிருந்து எதிர்பாராமல் தேர்தல் காலத்தில் விழித்திருக்க வாய்ப்பில்லை. ஊழலை ஒழிக்க வேண்டும் என்றாலும் இவரின் உண்ணாவிரதத்தில் எதோ நெருடுகிறது.

ஊழலை ஒழிக்க, நல்ல இளமை இருந்தபோது இருக்காத உண்ணாவிரதம், அறுபத்தி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பல பிரசித்திபெற்ற ஊழல்களை பார்த்தபோது இருக்காத உண்ணாவிரதம், தற்போது ஏன்? என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

யாருடைய மறைமுக திட்டமும் (hidden agenda) யாருக்கும் தெரியாத நிலையில், இவருடைய உண்ணாவிரதத்தின் தேவை சரி என்றாலும் நோக்கம் சரியா என தெரியவில்லை. தூண்டபட்டதா? அல்லது தோன்றியதா? சிந்திக்கவேண்டிய கேள்வி. யாரோ ஆதாயம் தேட யாருக்கோ ஆதாயம் கிடைக்க இவரது உண்ணாவிரதம் பயன்படகூடாது பாருங்கள் (இவரது உண்ணாவிரதம் ஊழலை உடனே ஒழிக்க பயன்படாது என்ற எதார்த்த உண்மை இருக்கும்போது).

ஊழல் என்பது பொருள் ஆதாயம் மூலமாக மட்டும் இருக்கவேண்டிய தேவை இல்லை. அது நடுநிலையற்ற செயல்பாடுகளையும் சேர்த்தே குறிக்கிறது (தன் சாதிக்காக, தன் மதத்திற்காக, தன் இனத்திற்காக, தன் கொள்கைகளுக்காக, தான் சார்ந்த அரசியலுக்காக, தன் புகழுக்காக செய்யும் நடவடிக்கைகள் சலுகைகள் அனைத்தும் சேர்ந்தது)

மக்கள் போராட்டமாக சித்தரிக்கபடுகிறது. மக்கள் போராட்டம் என்பதை இந்தியா சந்தித்ததே இல்லை ( தெலுங்கானா பகுதியை தவிர) போராட்டம் என்பது எப்போதும் தலைவர்களின் போராட்டமாகவும் அரசியல் கட்சிகளின் போராட்டமாகவும் மட்டுமே இருந்துள்ளது. போராட்டத்தை தூண்ட தெரிந்தவர்களுக்கு அடக்கவும் தெரியும் அதுபோல அடக்க தெரிந்தவர்களுக்கு தூண்டவும் தெரியும். நடக்கும் நாடகத்தை நாம் இரசித்து பார்ப்போம். ஒரு காந்தியவாதியாக இதுவரை சாதி மத கொடுமைகளுக்காக போராடாத இந்த நபர் தற்போது ஊழலுக்காக போராடுவதுதான் எனக்கு உறுத்தலாக இருக்கிறது.


ஒரு உலக கோப்பை மட்டைபந்து விளையாட்டு போட்டியானது, எப்படி நமது மக்களை, அவர்களின் இந்திய அரசுக்கு எதிரான அத்தனை எதிர் மனப்பன்மையினையையும், திசை திருப்பி குதுகுலமாக கும்மாலமடிக்க வைத்தது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். இத்தனைக்கும் அது இந்தியா சார்பாக விளையாடிய விளையாட்டல்ல. பல நாடுகளை சேர்ந்த தனியார் விளையாட்டு நிறுவனங்கள் தங்களுக்குள் வர்தகரீதியாக ஆதாயத்திற்காக நடத்திய போட்டி அது. இந்திய அரசுக்கு அதாவது நாம் சொல்லும் இந்தியாவிற்கும் அந்த போட்டிக்கும் எந்த சம்பதமும் இல்லை. டாடா நிறுவனத்துக்கும் டொயோடா நிறுவனத்திற்கும் இடையில் நடக்கும் வர்தகபோட்டிபோன்றது மட்டைபந்து உலக கோப்பை போட்டி. ஆனால் நமது மக்கள் எப்படி இந்தியா இந்தியா என்று எவ்வளவு கத்தி, இந்த போழுதுபோக்கில் மதி மயங்கி, போலியான தேச பக்தியை வெளிபடுத்தினார்கள்.  நாளை வரபோகும் பரபரப்பான அதிர்ச்சிகரமான அல்லது மகிழ்ச்சிகரமான செய்திகள், இந்த காந்தியவாதியை மறக்கடிக்கும். நமது பத்திரிக்கை வியாபாரிகள் இவரது செய்திகளை முதல் பக்கத்திலிருந்து அடுத்தடுத்த பக்கத்திற்கு மாற்றி செய்தியை சுருக்கி இறுதியில் மறந்துவிடுவார்கள். உலக கோப்பை பரபரப்பில் தன்னை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று கருதி, இந்த காந்தியவாதிகூட உலக கோப்பை முடிந்தவுடந்தான் அராம்பிகிறார் அவரது உண்ணாவிரதத்தை என்றால் பார்த்துகொள்ளுங்கள்.



மத்திய அரசு அதாவது காங்கிரஸ் அரசு, இந்த சூழலில் முள்ளில் விழுந்த சேலையை எடுப்பது போல கையாண்டு வருகிறது.

இந்த காந்தியவாதி, ஒரு உண்மையை மீண்டும் நினைவுபடுத்திகொள்ளவேண்டும், ஆங்கில அரசுக்கு எதிராக போராடிய காந்தி,  மத வெறியாளர்களிடம் தோற்றுப்போனார் என்பதை. இந்தியாவின் கல்வி அறிவு தொனுற்றி எட்டு சதவிகிதத்தை எட்டும் வரை, சாதி மற்றும் மதங்களினால் ஏற்பட்டுள்ள ஏற்ற தாழ்வுகள் சமன்படுத்த படும் வரை, பொருளாதார ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் சமன்படுத்தபடும் வரை, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவு செய்யப்படும் வரை, இந்தியாவில் ஊழல் இருக்கும் , ஊழல் இருக்கும் , ஊழல் இருக்கும். இவையெல்லாம் சரிசெய்யபடுவதற்கு போராடாமல், நேரடியாக ஊழலை ஒழிக்க போராடுவது என்பது நோய் வருவதற்கான காரணிகளை ஒழிக்காமல் நோயை ஒழிக்க மருந்து தருவதை போலத்தான். நோய் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கும் அதை ஒழிக்கமுடியாது. எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்ற அடிப்படை அறிவில்லாத பழைய பிற்போக்குத்தனம் நிறைந்த காந்தியவாதியாக இருக்கிறார் இந்த பெரியவர்.   

ஆஷ் துறையை கொன்ற வாஞ்சிநாதன் என்றழைக்கப்படும் சங்கரன் அய்யர் ஒரு பார்ப்பன தீவிரவாதி.

இந்தியாவில் பல பார்ப்பன பொய்யர்களும், திரிபுவாதிகளும், ஊடகம் மற்றும் இணையம மூலமாக பல புரட்டு தகவல்களை பரப்புவதில் கெட்டிகாரத்தனமாக செயல்படுகிறார்கள். வாஞ்சிநாதன் என்றழைக்கப்படும் சங்கரன் அய்யர் ஆஷ் துறையை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டபிறகு அவனிடமிருந்து கைபற்றபட்ட வாக்குமூல கடிதம் குறித்த விபரம் பின்வருமாறு :

After the shooting the assassin ran along the platform and hid in the latrine. Some time later he was found dead, having shot himself in the mouth. In his pocket was found the following letter:

The mlechas of England having captured our country, tread over the sanathana dharma of the Hindus and destroy them. Every Indian is trying to drive out the English and get swarajyam and restore sanathana dharma. Our Raman, Sivaji, Krishnan, Guru Govindan, Arjuna ruled our land protecting all dharmas and in this land they are making arrangements to crown George V, a mlecha, and one who eats the flesh of cows. Three thousand Madrasees have taken a vow to kill George V as soon as he lands in our country. In order to make others know our intention, I who am the least in the company, have done this deed this day. This is what everyone in Hindustan should consider it as his duty.

sd/- R. Vanchi Aiyar, Shencottah

மேலே உள்ள வாக்குமூல கடிதத்தின்படி, கொலைக்கான காரணம் இந்திய சுதத்திரம் அல்ல, மாறாக, இந்து சனாதன வெறியே என்பது புலப்படும். இந்த பார்ப்பன தீவிரவாதியை, தேச விடுதலைக்கு போராடிய வீரனைப்போல சித்தரிக்க சில பார்ப்பன பத்திரிக்கைகள் முயலுகின்றன.  

தமிழகத்தை பாதித்திருக்கும் புற்றுநோய் ஆரியம்

தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் நலன், தமிழ்நாட்டின் வளம் இவற்றின் பாதுகாப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சி - இவற்றை பாதித்திருக்கும் புற்றுநோய்தான் ஆரியம். மாமி மூலமாக இந்த புற்றுநோய் கிருமியை பரப்ப, தமிழகத்தில் உள்ள பார்பனர்கள் சிலர் திட்டமிட்டு மாமியை சரியான ஒரு இடத்தில நுழைத்து, சரியான நேரத்தில் வளர்த்து, தங்களது நீண்டகால நோக்கமான திராவிட இன அழிப்புக்கு பயன்படுத்திவருகின்றனர்.


  • நன்றாக உற்று கவனியுங்கள், மாமி தவறியும் எந்த குழந்தைக்கும் தமிழில் பெயர் வைப்பதில்லை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், அண்ணா காலத்திலிருந்து உளமாற என்று பதவியேற்றுகொண்டிருந்த அமைச்சர்கள் இன்று கடவுள் மேல் ஆணையாக என்று கூறி பதவி ஏற்பதை.

  • நன்றாக உற்று கவனியுங்கள் எம்ஜியார் காலத்தில் கட்சி தொடங்கியதில் இருந்து சுவரொட்டிகளில் இருந்த பெரியாரின் படம் எடுக்கப்பட்டு தற்போது சிறிய அளவில் அண்ணா மற்றும் எம்ஜியார் படங்கள் மட்டும் போடபடுவதை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், மற்ற பார்பனர்களோடு சேர்ந்து விடுதலைபுலிகளை மாமி தொடர்ந்து எதிர்த்து வருவதை.


  • நன்றாக உற்று கவனியுங்கள், ராஜாஜியின் வாரிசாக, அனைத்துதரப்பு குழந்தைகளும் சமமான கல்வி தரும் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி இருப்பதை.


  • நன்றாக உற்று கவனியுங்கள், ஆரிய போர்ப்படை தளபதியாக இருக்கும் மோடியுடன் மாமி நெருக்கமாக நட்பு பாராட்டுவதை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், ஆரிய வெறிபிடித்தவர்களுக்கு ஆதரவாக பாபர் மசூதி இடிப்பிற்கு மாமி செயல்பட்டதை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், ஆரிய பார்பனர்களுக்கு ஆதரவாக, மத மாற்ற தடை சட்டம் கொண்டுவந்ததை.


  • நன்றாக உற்று கவனியுங்கள், ஆரிய பார்பனர்களுக்கு ஆதரவு நடவடிக்கையாக, இட ஒதுக்கீட்டின் மூலம் வேலை பெற்றிருக்கும் பல் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்ப முயற்சித்ததை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், அரசு வேலைகளில் திராவிட இன மக்களுக்கு முன்னுரிமை கிடைப்பதால், ஆரிய பார்பனர்கள் மகிழும் வண்ணம் பணி நியமன தடை சட்டம் கொண்டுவந்ததை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், ஈழ தமிழ் அகதிகளுக்கு கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு இருந்ததை, ஆணை இட்டு அகற்றிய ஆரிய நடவடிக்கையை.
  •  நன்றாக உற்று கவனியுங்கள், பார்பனர் சங்கம் தேர்தலில் தங்கள் இனம் முதல்வர் பதவிக்கு வருவதற்காக மாமிக்கு ஆதரவு தெரிவித்ததை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், பார்பனர்களுக்காகவே துக்ளக் என்ற பெயரில் பத்திரிக்கை நடத்திக்கொண்டு, வெறுக்கதக்கதா பார்பனீயம் என்று கட்டுரை எழுதி, எங்கே போகிறான் பிராமணன் என்று ஜெயா டி,வி.இல் தொடர் வெளியிட்ட, அர்.எஸ்.எஸ் காரரான சோவிடம், மாமி ஆசீர்வாதம் வாங்குவதையும், சோ மாமிக்காக பல பார்பன ஆங்கில ஊடகங்களுக்கு நேரலை பேட்டி அளிப்பதையும்.

  • நன்றாக உற்று கவனியுங்கள், தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இலவச கல்வி மற்றும் வேலையில் முன்னுரிமை என்ற தொலைநோக்குகொண்ட சமூக நலதிட்டதை தடுத்து வைத்திருக்கும் மாமியின் ஆரிய சிந்தனையை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், அண்ணாவின் முதன்மையான மூன்று வரலாற்று சாதனைகளில் ஒன்றான இருமொழி கல்விதிட்டத்தை ஒழித்து இந்தியை கொல்லைபுறவழியாக தமிழக பாடமொழியாக ஆக்க, மத்திய அரசாங்கம் தமிழை ஆட்சி மொழியாக்கினால், நாங்கள் இந்தியை எங்கள் பாடமொழியாக எற்றுகொள்கிறோம் என்று அதே அண்ணா அமர்ந்திருந்த சட்டசபை நாற்காலியில் அமர்ந்து கொண்டு சட்டசபையில் தீர்மானம் போட்ட ஆரிய சதியை.

  • நன்றாக உற்று கவனியுங்கள், அண்ணாவின் முதன்மையான மூன்று சாதனைகளில் ஒன்றான சுயமரியாதை திருமண செல்லுபடி சட்டத்தில் தாலி கட்டுவதை கட்டாயமாக்காத நிலையில், அண்ணா பெயரில் உள்ள கட்சியில் தலைமையில் அமர்ந்துகொண்டு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்த ஆரிய சதியை.
  • நன்றாக உற்று கவனியுங்கள், சிதம்பரம் கோவிலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொள்ளையடித்துகொண்டு தமிழில் வழிபாடு நடத்த தடைவிதித்துகொண்டு இருந்த தீட்சித பார்பனர்களை நெறி படுத்தும்விதமாக தி.மு.க அரசினால் அந்த கோவில் அறநிலயதுறைகட்டுபாட்டின் கீழ் கொண்டுவரபட்டவுடன், சுப்பிரமணி சாமி வழக்கு தொடுக்க அந்த தீட்சித பார்பனர்கள் ஜெயா மாமியிடம் சென்று முறையிட்டதை.  

தன்னை இந்து என தவறாக கருதிகொண்டிருக்கும் மற்றும் இந்து மதத்திற்கு வக்கலாத்து வாங்கும் திராவிடர்களுக்கு

அச்சம் அறியாமை என்ற வலுவான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டுள்ள பெரிய கோபுரம்தான் கடவுள் நம்பிக்கை.

அச்சத்தையும் அறியாமையையும் போக்குவதற்காக செயல்படுபவர்கள் பகுத்தறிவு பிரசாரம் செய்பவர்கள்.

அச்சத்தையும் அறியாமையையும் வலுகுன்றாமல் வைதிருக்க முயற்சிப்பவர்கள் ஆன்மீக பிரச்சாரகர்கள்.

நம்பிக்கை என்ற பெயரில் இருக்கும் மூடநம்பிக்கை என்பது அடுத்தவர்களின் ஆன்மீக கருத்தை ஆராயாமல் அப்படியே ஏற்றுகொள்ளும் சிந்தனை சோம்பேறிகளின் வார்த்தை. 

அச்சத்தையும் அறியாமையையும் அசைத்து பார்க்க முயலும், அழிக்க முயலும் பகுத்தறிவுவாதிகளை, நாஸ்திகர்கள் (நாத்திகர்கள்) என்று ஆஸ்திகர்கள் அதாவது ஆத்திகர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.   

இவ்வாறு அனைத்து மதங்களிலும் அச்சத்தையும் அறியாமையையும் பயன்படுத்தி மதநிறுவனங்களும் அதன் பிரசாரங்களும் திறம்பட நடந்து வருகின்றன. போதாகுறைக்கு, ஒவ்வொரு தனி மனிதனும், எந்த பொருள் ஆதாயமும் இல்லாமல், தன்னால் முடிந்தவரை கடவுள் நம்பிக்கையையும் மதபெருமையையும் சந்தைபடுத்திவருகிறார்கள்.

இந்தியாவிலுள்ள பகுத்தறிவுவாதிகள், பெரும்பான்மையினோர் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருப்பதனாலும் (மத நம்பிக்கையற்றவர்கள் என ஒரு தனிப்பிரிவு பட்டியலில் இல்லாத காரணத்தால்), இந்தியாவின் பெரும்பான்மையான மதம் இந்துமதம் என்பதாலும், மேலும் இந்துமதம் மற்ற மதத்தைவிட கொடுமையான சாதி பிரிவை தன்னகத்தே கொண்டுள்ளதாலும், இந்துமதத்தை அதன் போலித்தனங்களை, மூடநம்பிக்கைகளை, அதன் கொடுமைகளை, அதன் சாமியார்களின் பித்தலாட்டங்களை குறை சொல்லி பிரச்சாரம் செய்வது இயல்பானதே.


இவ்வாறு பிரச்சாரம் செய்வதற்கு சரியான பதில் தர கையாலாகாதவர்கள், இந்தியாவின் தலைச்சிறந்த பகுத்தறிவுவாதியான தந்தை பெரியாரை தரக்குறைவாக பேசுவது என்ற தங்களின் கீழான புத்தியை வெளிகாட்டுகிறார்கள். தந்தை பெரியார், சமூகத்திற்காக, அதன் நலத்திற்காக சிந்தித்து செயலாற்றினார், அவர் மொத்த சமூக அவலங்களையும், மூடநம்பிக்கைகளையும் ஒரு சேர தாக்கி பிரச்சாரம் செய்தார், அவர் கடவுள் கதைகளையும் அதன் கதாநாயகர்களையும் தாக்கி பேசினார், அதுவும் மூட நம்பிக்கை ஒழியவேண்டும் என்பதற்காக, ஆனால் அவர் என்றும் தனி மனித தாக்குதலில் ஈடுபட்டதில்லை, அதன் காரணமாகத்தான் இறுதிவரை நாதிகராய் இருந்த அவரை,  அவரது அரசியல் சமூக எதிரியாக இருந்த ராஜாஜி அவரது இறுதிவரை நண்பராக இருக்க முடிந்தது. அப்பேற்பட்ட ஒரு கண்ணியவானை இன்று சிலர் மதபோதையின் காரணமாக தரக்குறைவாக பேசுவது அவர்களது அறியாமையை மட்டும் வெளிபடுத்தவில்லை அவர்களது இழிவான குணத்தையும் வெளிபடுத்துகிறது.


மேலும், இவ்வாறு இந்துமதத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் கேட்கும் ஒரு கேள்வி : இந்து மதத்தையும் அதன் சாமியார்களையும் எதிர்க்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் மற்ற மதங்களை இந்த அளவுக்கு தீவிரமாக எதிர்பதில்லை? என்பதுதான்.

பகுத்தறிவுவாதிகளை பொருத்தவரை, இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள பகுத்தறிவுவாதிகளின் தெளிவான கொள்கை “கடவுள் இல்லை” , “கடவுள் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று” என்பதுதான். இதில் இந்து கடவுள் , இசுலாமிய கடவுள், கிருதுவ கடவுள் அந்த கடவுள் இந்த கடவுள் என்றெல்லாம் பிரிவுகள் கிடையாது. ஆனால் மதம் என்று வருகையிலே உலகின் அந்தந்த பகுதியில் உள்ள பகுத்தறிவுவாதிகள் தங்களின் பகுதியில் உள்ள பெரும்பான்மையான மதத்தை அதன் மூடநம்பிக்கையை எதிர்ப்பது வழக்கமானது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள பகுத்தறிவுவாதிகள் இந்துமதத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்வதில்லை ஆனால் அங்குள்ள பெரும்பான்மை மதமான இசுலாமிய கிருத்துவ மதத்தை எதிர்கிறார்கள். அவ்வாறே இந்தியாவில் உள்ள பகுத்தறிவுவாதிகள் இங்கு இந்து மதத்தை எதிர்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில் உள்ள இந்து மத தீவிரவாதிகள் கேட்பதுபோல அந்த நாடுகளில் மற்ற மதங்களை ஏன் எதிர்க்க வில்லை என கேட்பதில்லை. அகவே அவர்களுக்கான பதில் : உங்கள் மதத்தை சேர்ந்த ஒருவர், உங்கள் மதத்தின் அதன் சாமியார்களின் குறைகளை சொன்னால், அதற்கு பதில் அளிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மனைவி உங்களிடம் குறைபட்டுகொண்டால், அடுத்தவீட்டுகாரனிடம் கேள் எதிர்த்தவீட்டுகாரனிடம் கேள் என்றா சொல்லுவீர்கள்? இதெல்லாம் ஒரு எதிர்வாதமா? பதில் அளிக்க திராணி இல்லாத இந்து தீவிரவாத கூட்டம், என்று தனது குறைகளை பற்றி கவலைபட்டு திருந்தி மற்ற மதங்களை குறை சொல்லுவதை நிறுத்தபோகிறது?


திராவிடர்களாகிய எங்களை எப்படி இந்துக்கள் என்று பொதுமைபடுத்தி இருக்கிறார்களோ, அவ்வாறே சித்தர்களையும்  இந்து மத வட்டத்தினுள் இழுத்து விட்டுவிட்டார்கள். திராவிட தமிழர்களே, குறிப்பாக பெரியாரை எதிர்ப்பவர்களே, பகுத்தறிவுவாதிகளை எதிர்பவர்களே, கீழே வரும் சித்தர் பாடல்கள் உங்களுக்கு ஒரு சிறிய வெளிச்சத்தை காட்டும் என நம்புகிறேன்.


ஓசை உள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்ததுமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிகிறீர்
பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல் சொல்லமே?

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முனமுனேன்று சொல்லுமந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதைகான்
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்ட தெவ்விடம்
ஆதி பூசை கொண்டதோ அநாதி பூசை கொண்டதோ
எது பூசை கொண்டதோ இன்னதேன்றரியுமோ



"பாலில்லா   சேய்கள், பசி, பிணியாளர்
பல்துயர் பெறுமின்   நாட்டில்
பாலோடு தயிர், நெய், கணி, சுவைபாகு
பருப்பு நல் அடிசிலின் திரளை
நூலணி வார்தம் நோய்யையே  நிரப்ப
நுழைத்த கல் உருவின் முன்படைத்தே
சாலவும் மகிழ்வார் இது கொலோ சமயம்?
சழகினுங்  கழலுமென்  நெஞ்சே "


வகைக் குளங்கள் பேசியே
வழக்குரைக்கும் மாந்தர்காள்,
தொகைகுலங்கள் ஆன நேர்மை
நாடியே உணர்ந்த பின்
மிகைத்த சுக்கிலம் அன்றியே
வேறு ஒன்று கண்டீலர்
நகைக்குமாறு மனு எரிக்க
நாளும் நாளும் கூடுவீர்


சாலமுடன் கண்டவர் முன் வசமாய் நிற்பார்
சாத்திரத்தை சுட்டெரித்தாலவனே சித்தன்

சாத்திரத்தைசுட்டு சதுர மறையை பொய்யாக்கி
சூத்திரத்தை கண்ட துயர் அறுப்பது எக்காலம்


சதுர்வேதம், அறுவகைச் சாத்திரம் பல
தந்திரம் புரானகளை சாற்றும் ஆகமம்
விதவிதமான வானவேறு நூல்களும்
வீணான நூல்களே என ஆடு பாம்பே


தத்துவ குப்பையை தள்ளுங்கடி
வேத சாத்திர போத்தலை மூடுங்கடி


தயங்காமல் பிழைப்பதற்கே இந்தஞானம்
சார்வாக பாராட்டும் ஞானம் வேறே
மயங்குவதற்கு ஞானம்பார் முன்னோர் கூடி
மாட்டினார் கதை காவ்ய புரானமென்றும்
இயலான ரசதனலிப் புகுந்தால் போலும்
இசைத்திட்டார் சாதிரங்களாறேதான்
வயலான பயன்பெறவே வியாசர்தாமும்
மாட்டினார் சிவனாருத்திரவினாலே

உத்தரமிப்படியே புரானங்கட்டி
உலகத்தில் பாரதம் போல் கதையைகட்டி


கர்தாவை தானென்று தொனவொட்டாக்

கபட நாடகமாக மேதஞ்ச்செர்த்துச்
சத்தாக வழியாகச் செர்ந்தோர்க் கேல்லாஞ்
சதியுடனே வேகுதர்க்கம் பொருள் போற்பாடிப்
பத்தாக சைவர்க் கொப்பனையும் செய்து
பாடினார் சாத்திரத்தை பாடினாரே!


சாதி பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப்பிரிவினிலே விளையாடுவோம்


வேண்டாத மனையில் உறவுசெய்வோம்




பறச்சி ஆவதேதடா பணத்தி ஆவதேதடா
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கம் இட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ, பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் புகுந்து பாரும் உம்முளே


கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணைய் மோர்புகா
உடைந்து போன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ, உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை, இல்லை இல்லை இல்லையே


கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே
ஆவது அழிவது இல்லை இல்லை இல்லையே


இவ்வாறு பல பாடல்கள் சித்தர்கள் இயற்றியுள்ளனர். அவர்களின் குரல் பகுத்தறிவுவாதிகளாகிய எங்களின் குரல்கள் போலவே ஒலிப்பதை காணுங்கள்.

சித்தர்களின் ஆன்மீக பாடல்களை மட்டும் சொல்லி, அவர்களையும் இந்து சாமியார்களாக்கி,  உங்களை பெருமைப்பட வைக்கும் செயலை திறம்பட ஆன்மீக திரிபுவாதிகள் செய்துள்ளார்கள்.    திராவிடர்களான நம் சித்தர்கள் அறிவுள்ளவர்கள் என நீங்கள் நம்பினால், மேற்கண்ட பாடல்களையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.


பார்ப்பன மதமான இந்துமத, அதன் முக்கிய சட்டமான மனுதர்மசட்டத்தின் (நம்மை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆட்டுவித்த சட்டம்) படி சூத்திரர்கள் ( சூத்திரர்கள என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே என தவறாக எடுத்து கொள்ளாதீர்கள் நண்பர்களே – பார்பனர் தவிர அனைவரும் சூத்திரர்களே) என்பவர்கள் “தேவிடியா மகன்” அல்லது “தேவிடியா மகள்” என பொருள். ஆகவே இந்துமதத்தை எற்றுகொள்வது என்பது, தங்களை இந்த பொருளில் அழைத்துக்கொள்ளும் அல்லது ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு சமம்.


வேதம், சனாதன தர்மம், மனுதர்மம் போன்றவை இந்து மதத்திற்கு அதாவது பார்ப்பன மதத்திற்கு சம்பந்தமே இல்லை என கூறும் முட்டாள் திராவிடர்களிடம் பேசி பயனில்லை என்பது நான் அறிந்த உண்மை. அவர்களுக்கு உண்மையான வரலாறு தெரியாது. தங்களை தேவிடியாமகன் என்று மதங்கள் சொன்னாலும், சமூக ஏற்றத்தாழ்வை பற்றி கவலைப்படாமல், இன்று நம் வயித்திற்கு உணவிருந்தால் போதும். வாழ்க்கை சுகமாய் அமைந்தால் போதும், என நினைக்கும் மனிதர்களிடம் என்னத்தை சொல்ல? படித்துவிட்டால் தங்களை அறிவாளிகள் என நினைத்துக்கொள்ளும் சுயமரியாதை இல்லா பிறவிகளிடம் பேசி என்ன பயன்? இன்னமும் கோவிலுக்குள் போய் கடவுள் சிலையை தொட்டு பூசை செய்ய அனுமதிக்கப்படாத தீண்டத்தகாத பிறவிகளாக சட்டப்படி பார்க்கப்படும் கருதப்படும் ஈனபிறவிகளே, சூடு சுரனை அற்ற உங்களிடம் பேசி பயனென்ன? மத போதையால் மானங்கெட்டு உளரும் உங்களிடம் பேசி என்ன பயன்? 


இவ்வாறு எனக்குள் ஒரு கோபமும் விரக்தியும் வந்தாலும், ஒரு பெரியாரியவாதியாக, பெரியாரின் வழியில் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை போக்க, அதனை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்ற, பகுத்தறிவு பிரச்சாரத்தை தொடர்ந்து செய்யவேண்டிய தேவை இருக்கிறது. உண்மைகளை எடுத்து சொல்ல வேண்டி இருக்கிறது.

திராவிடர்களே இறுதியாக உங்களின் அறியாமையை விளக்க நான் தரும் ஒரு தகவல்: ஆன்மீக வழியை பின்பற்றும் நீங்கள், குறிப்பாக இந்து மத வழியை பின்பற்று நீங்களும் மற்றும் உங்கள் முன்னோர்களும், உங்களின் தாய் இறந்தால் திவசம் செய்திருப்பீர்கள். அப்பொழுது பார்பனர் சொல்லும் சம்ஸ்கிருத வார்த்தைகளை மந்திரம் என நம்பி திரும்ப சொல்லியிருபீர்கள், அவர்கள் சொல்ல சொல்லியிருப்பார்கள் நீங்களும் திரும்ப சொல்லியிருபீர்கள், அல்லது கேட்டுக்கொண்டு சும்மா இருந்திருப்பீர்கள். அந்த சம்ஸ்கிருத மந்திரமாவது:

“என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்ததாம் ஆயுபூரன்யஹா அவபத்ய நாம..........


இதன் பொருள்: “எங்க அம்மா ராத்திரி வேளையிலே யாருகிட்டே படுத்து என்னை பெற்றாலோ தெரியாது ஆனால்.... நான் ஒரு உத்தேச நம்பிக்கையில்தான் அவளை என் அப்பாவின் மனைவியாக கருதுகிறேன், அவளுக்கு என் சிரார்த்தத்தை செய்கிறேன்.....


இதை படித்த பிறகு சிறிதேனும் நீங்கள் வெட்கபடுவீர்கள் என நம்புகிறேன். இதற்கு பிறகும் நீங்கள் இந்து மதம் என்று நம்பப்படும் பார்பன மதத்திற்கு வக்காலத்து வாங்கினால், நான் ஒன்றும் செய்யமுடியாது.         


திராவிட தமிழர்களே, உங்களின் ஆன்மீக கருத்துக்கள் எதுவும் உங்களின் சுய சிந்தனையில் தோன்றிய கருத்துக்கள் இல்லை அவையாவும் உங்களின் சிறுவயதிலிருந்து போதிக்கப்பட்ட புகட்டப்பட்ட கருத்துக்களே. நான் சொல்ல வருவது என்னவென்றால், ஆன்மீக கதைகளிலும் மதங்களிலும் உள்ள ஆபாசங்களை, மோசடிகளை மறைத்து அதன் ஒரு பகுதியை மட்டும் காட்டி, அதை பெரிது படுத்தி , போற்றி, பரப்பி மக்களை சிந்தனை குருடர்களாக, ஏன் சிந்தனை சோம்பேறிகளாக ஆக்கி, சொல்லப்படும் கருத்துகளை பகுத்தாராயாமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆன்மிகம் தனது கருத்து சர்வாதிகாரத்தை வைத்திருக்கிறது.

கருத்து சுதந்திரத்தை பெரிதும் மதித்து, எப்பொருள் யாய் யார் வாய்கேட்பினும் அதன் மெய் பொருளை அறிய விரும்பும் யாரையும் நாஸ்திகன் என்று குறிப்பிட்டு, அவர்களை சமூகத்தில் ஒரு தீண்டதகாதவராக, தீயவராக சித்தரித்து சமூகத்தில் அவர்களை ஓரம்கட்டி அதன் மூலம் அப்படிப்பட்டவர்களை மிக மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ள ஒரு சிறுபான்மையினராக ஆன்மிகம் மாற்றியதன் விளைவாக – உலகில் இந்தியா உட்பட பல பகுதில் தீவிரவாதமும் தேவையற்ற பல போர்களும், மனித உயிர் அழிப்புகளும், பொருள் இழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. மேலும் அவை தொடரவும் செய்கின்றன.

பிறக்கும் எந்த குழந்தையும் கடவுள் நம்பிக்கையோடோ அல்லது நம்பிக்கை அற்றோ   பிறப்பதில்லை, நாம் ஏன் ஒன்றும் தெரியாத அந்த குழந்தைகளை ஆன்மீக நாட்டத்தில்  வலுகட்டாயமாக தள்ளுகிறோம்?


ஆண்மீகம்  நல்லது என்று நாம் கருதுவதை அந்த குழந்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்  என்பதால் அதை நாம் அதன் சிறு வயதிலேயே திணிக்க தொடங்குகிறோம்.


திராவிட தமிழர்களே, நமது வருங்கால தலைமுறையினருக்காகவாவது நாம் நமக்கு நம் பெற்றோராலும் சமூகத்தாலும் அளிக்கபடாத கருத்து சுதந்திரத்தை அளிப்போம். நமது கருத்தை திணிப்பதை தவிர்ப்போம். உலகத்தில் அமைதி நிலவ, மத / கடவுள் மூட நம்பிக்கைகள் ஒழியவேண்டும். பகுத்தறிவு பெருகவேண்டும்.     


- திராவிட புரட்சி    

ஆங்கிலம் கலந்து பேசும் மேதாவிகள் மொழி ஊனமுற்றவர்கள்

எனக்கு தெரிந்த வரையில் ஹிந்து நாளிதழை வைத்துக்கொண்டு சுற்றி வருபவரில், தினமும் ஹிந்து போன்ற ஆங்கில நாளிதழ் வாங்கும் தமிழர்களில் அதை முழுமையாக படித்து புரிந்துகொள்ள தெரியாதவர்கள் 98% இருப்பார்கள். ஆனாலும் ஆங்கில நாளிதழ் வாங்கி படிப்பதில் அவர்களுக்கு ஒரு பெருமை.


சிலர் அடுத்தவர்களுக்கு ஆலோசனை கூறுவதும் உண்டு ஆங்கிலம் நன்றாக கற்றுகொள்ள “ஹிந்து பேப்பர் வாங்கி படி” எப்படி சொல்லுபவர்கள் அதிகம். எனக்கு தெரிந்து நன்றாக படித்து பட்டம் பெற்ற பலரும், நல்ல நிலையில் உள்ள பலரும் பேசும் ஆங்கிலம் அணைத்து வகையான இலக்கண பிழைகளோடுதான் இருக்கிறது. கேட்பவனுக்கும் பேசுபவனுக்கும் உண்மையிலேயே முழுமையாக இலக்கண சுத்தமாக ஆங்கிலம் பேசத்தெரியாத காரணத்தால், இந்த உண்மை அதிகமாக வெளியே தெரிவதில்லை.

இதில் சிலர் சொல்லி தருவது என்னவென்றால், ஆங்கிலம் கற்றுகொள்ள வேண்டுமென்றால் “தப்பு தப்பாவாது பேச தொடங்குங்கள் அப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமாக பேச வரும்” என்பது. இப்படி எல்லாம் அயல் மொழிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நம்மவர்கள் தாங்கள் பேசும் தங்களின் தாய்மொழிக்கு அத்தனை முக்கியத்துவம் தராததனால், இன்று பல பேர் முழுமையாக ஆங்கிலமும் பேச தெரியாமல், முழுமையாக தமிழும் பேச தெரியாமல், இரண்டு மொழி வார்தைகளையும் கலந்து, போதாகுறைக்கு கொஞ்சம் சமஸ்கிருத வார்த்தைகளையும் கலந்து பேசி,  எந்த ஒரு மொழியையும் முழுமையாக பேச தெரியாத ஒரு புதிய விசித்திரமான மனித பிரிவாக மாறி வருகிறார்கள். இவர்களின் ஆங்கில வார்த்தைகளின் கலப்பு சதவிகிதம் அவர்கள் கற்றுகொண்ட ஆங்கிலத்தின் அளவுகளை பொறுத்து மாறுபடுகிறது.



இப்படி பட்ட விசித்திர பிரிவினரை அவர்களின் மொழிகுறைபாட்டை எப்படி அழைக்கலாம்? “மொழிஊனம்” என்றும் “மொழி ஊனமுற்றவர்கள்” என்று அழைக்கலாம்.

ஒரு கால் ஊனமுற்றவர்கள், ஒருகாலால் நடக்கமுடியாது என்பதால், அதற்காக ஒரு கட்டையை துனையாககொண்டு தாங்கி நடப்பார்கள். இவ்வாறு ஒரு மொழியில் பேச முடியாதவர்கள் மற்றொரு மொழியின் துனையைகொண்டு (கட்டையின் துணையை போன்று) பேசுவதால், அவர்களை மொழி ஊனமுற்றவர்கள் என்று தாராளமாய் அழைக்கலாம்.

இந்த மொழிஊனமுற்றவர்கள், தங்களுக்கு சொந்தமான இரண்டு கால்களில் நடப்பவர்களை, அதாவது தங்களின் தாய் மொழியான தமிழிலேயே பேசுபவர்களை (வேறு மொழி தெரியாதவர்கள் மற்றும் தமிழிலேயே பேச வேண்டும் என்று நினைப்பவர்கள்), கிண்டல் செய்வது எந்த வகையில் சரி? இவர்களின் ஊனத்தை மறைத்துகொண்டு அல்லது அதை பெரிதுபடுத்தாமல்  அடுத்தவர்களை கிண்டல் செய்வது நகைசுவையிலும் நகைச்சுவை.