Tuesday 7 February 2012

இந்த கதையை முழுமையாக புரிந்துகொண்டால், மதம் மற்றும் மனிதரால் உருவாக்கப்பட்ட கடவுள் இரண்டையும் புரிந்துகொள்ளலாம்

இது ஆங்கிலத்தில் இருந்து என்னால் மொழிமாற்றம் செய்யப்பட்டது. நமது நாட்டை கருத்தில்கொண்டு, கதையில் உள்ள மூவரின் பெயரும் மூன்று மதத்தை சேர்ந்தவர்களாக காட்டப்பட்டுள்ளது. இந்த கதையை முழுமையாக புரிந்துகொண்டால், மதம் மற்றும் மனிதரால் உருவாக்கப்பட்ட கடவுள் இரண்டையும் புரிந்துகொள்ளலாம்.


- திராவிடப்புரட்சி


இன்று காலை என் கதவு தட்டப்பட்டது. திறந்தபோது, நன்றாக உடையணிந்த நாகரீகமான இருவர் நின்றுகொண்டிருந்தார்கள். அந்த மனிதர் பேச்சை தொடங்கினார்.

ஜான்: வணக்கம்! என் பெயர் ஜான் இது லட்சுமி.

லட்சுமி: வணக்கம்! எங்களோடு சேர்ந்து அக்பரின் குண்டியை முத்தமிட உங்களை அழைக்க
வந்துள்ளோம்.

நான்: மன்னிக்கவும், நீங்க என்ன பேசுறீங்க? யார் அந்த அக்பர்? நான் எதற்காக அவரது குண்டியை முத்தமிடவேண்டும்?

ஜான்: நீங்கள் அவரது குண்டியை முத்தமிட்டால், உங்களுக்கு பது கோடி ரூபாய் தருவார். நீங்கள் முத்தமிடவில்லை என்றால், உங்களை வெறுத்து உதைத்து துரத்திவிடுவார்.

நான்: என்னது? இது என்ன மிரட்டல் கூட்டத்தின் வேலையா?

ஜான்: அக்பர் மற்றவர் நலனில் அக்கறை காட்டும் கோடீஸ்வரர். இந்த நகரத்தை உருவாக்கியவர் அக்பர். இந்த நகரமே அவருடையது. அவர் என்ன செய்ய வேண்டுமோ அதை அவர் செய்வார். அவர் உனக்கு பத்து கோடியை தர விரும்பிகிறார், ஆனால் அவரது குண்டியை நீ முத்தமிடும்வரை அவரால் அது முடியாது.

நான்: இது ஒன்றும் புரியும்படியாக இல்லையே...எதற்கு?

லட்சுமி: நீங்கள் ஏன் அக்பரின் அன்பளிப்பை கேள்வி கேட்கிறீர்கள்? உங்களுக்கு பத்து கோடி ரூபாய் வேண்டாமா? பத்து கோடி ரூபாய் என்பது அவரது குண்டியை முத்தமிடுவதற்கான மதிப்பு இல்லையா?

நான்: நல்லது, இது முறையாகவும் இருக்கலாம், ஆனால்......

ஜான்: பிறகென்ன, எங்களோடு குண்டியை முத்தமிட வாருங்கள்.

நான்: நீங்கள் அக்பரின் குண்டியை அடிக்கடி முத்தமிடுவீர்களா?

லட்சுமி: ஆமாம், எப்போதும் முத்தமிடுவோம்.

நான்: அவர் உங்களுக்கு பது கோடி ரூபாயை தந்துள்ளாரா?

ஜான்: இல்லை. இந்த நகரத்தை விட்டு நீங்கள் போகும்வரை உங்களுக்கு அது கிடைக்காது.

நான்: அப்படியானால், நீங்கள் ஏன் இந்த நகரத்தை விட்டு போகவில்லை?

ஜான்: அக்பர் சொல்லவிட்டாலோ, நீங்கள் பணம் பெறாவிட்டாலோ, அவர் உங்களை வெளியேறாவிட்டாலோ, நீங்கள் இந்த நகரத்தை விட்டுவெளியேற முடியாது.

நான்: அக்பரின் குண்டியை முத்தமிட்ட யாராவது, இந்த நகரத்தை விட்டு வெளியேறி பத்துகோடி ரூபாயை பெற்றது உங்களுக்கு தெரியுமா?

ஜான்: என்னுடைய அம்மா பல வருடங்கள் அக்பரின் குண்டியை முத்தமிட்டார்கள். கடந்த வருடம் அவர்கள் இந்த நகரத்தை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் நிச்சயமாக அந்த பணத்தை பெற்றிருப்பார்கள்.

நான்: அதற்கு பிறகு அவரோடு நீங்கள் பேசினீர்களா?

ஜான்: நிச்சயமாக இல்லை, அக்பர் அதற்கு அனுமதிக்கவில்லை.

நான்: அப்படியானால், இதுவரை பணத்தை பெற்றவொரு நீங்கள் பேசாதபோது, அக்பர் அந்த பணத்தை உங்களுக்கு தருவார் என்று எப்படி நம்புகிறீர்கள்?

லட்சுமி: நீங்கள் நீங்கள் இந்த நகரத்தை விட்டு போகும் முன்பே அவர் கொஞ்சமாவது தருவார். நீங்கள் உயர்வீர்கள், கொஞ்சம் அதிர்ஷ்டத்திலும் பெறுவீர்கள், சாலையில் கிடக்கும்  ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் நீங்கள் கிடைக்க பெறாலாம்.

நான்: அதற்கும் அக்பருக்கும் என்ன தொடர்பு?

ஜான்: அக்பருக்கு நிச்சயமாக அதில் தொடர்புண்டு.

நான்: மன்னிக்கவும், இது எதோ விளையாட்டில் தொடர்புடையது போல இருக்கிறது.

ஜான்: ஆனால் இது பது கோடி ரூபாய் தொடர்புடையது, நீங்கள் இதை விட மறுப்பீர்களா? ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள், நீங்கள் அவரது குண்டியை முத்தமிடாவிட்டால், அவர் உங்களை உதைத்து வெளியேற்றிவிடுவார்.

நான்: நான் அக்பரை நேரில் சந்திக்க முடிந்தால், அவரோடு பேச முடிந்தால், கேட்க்கவேண்டியத்தை நான் நேராக கேட்டுக்கொள்ளமுடியும்.

லட்சுமி: அக்பரை யாரும் பார்ப்பதில்லை, அவரோடு யாரும் நேராக பேசுவதுமில்லை.

நான்: பிறகு எப்படி நீங்கள் அவரது குண்டியை முத்தமிடுகிறீர்கள்?

ஜான்: சில சமயம் நாங்கள் அவரது குண்டியில் முத்தமிடுவதாக நினைத்து முத்தமிடுவோம், மற்ற நேரங்களில், சங்கரனின் குண்டியில் முத்தமிடுவோம், அவர் அதை அக்பருக்கு
கடத்திவிடுவார்.

நான்: யார் அந்த சங்கரன்?

லட்சுமி: அவர் எங்களது நண்பர். அவர்தான் எங்களுக்கு அக்பரின் குண்டியியை முத்தமிடுவதை கற்றுக்கொடுத்தார், நாங்கள் செய்வதெல்லாம் சில நேரங்களில் அவருக்கு விருந்து வைப்பது மட்டும்தான்.

நான்: அக்பர் இருப்பதாகவும், அவர் நீங்கள் குண்டியில் முத்தமிடுவதை விரும்புவதாகவும், அதற்கு பத்து கோடி ரூபாய் பெறுவீர்கள் என்று அவர் சொன்னதை எற்றுக்கொண்டீர்களா?

ஜான்: இல்லை இல்லை, எல்லாவற்றையும் விவரித்து அக்பர் எழுதிய கடிதம் சங்கரனிடம் உள்ளது. இதோ அதன் நகல என்னிடம் உள்ளது, அதை நீங்களே பாருங்கள்.

அக்பரிடம் இருந்து வந்த கடிதம்:
  1. அக்பரின் குண்டியை முத்தமிடுங்கள், அவர் உங்களுக்கு பத்து கோடி ரூபாயை நகரத்தை விட்டு போகும்போது தருவார்.
  2. கொஞ்சமாக சாராயம் பருகவும்.
  3. உங்களைப்போல இல்லாத மக்களை உதைத்து துரத்தவும்.
  4. சரியான முறையில் உணவருந்தவும்.
  5. அக்பர் இந்த கடிதத்தை எழுதும்படி பணித்தார்.
  6. நிலவு என்பது வெண்ணை கட்டியால் உருவாக்கப்பட்டது.
  7. அக்பர் சொல்லுவது அனைத்தும் சரி.
  8. கழிப்பறை சென்ற பிறகு கைகளை கழுவவும்.
  9. சாராயத்தை பயன்படுத்தாதீர்.
  10. கிடைத்ததை உண்ணுங்கள் சுவையை எதிர்பார்க்காதீர்.
  11. அக்பரின் குண்டியை முத்தமிடுவீர் அல்லது அவர் உங்களை உதைத்து வெளியேற்றிவிடுவார்.
நான்: இதை பார்த்தால், சங்கரனின் முகவரில் உள்ள காகிதத்தில் எழுதியதை போலவே இருக்கிறதே.

லட்சுமி: அகபரிடம் காகிதம் இல்லை.

நான்: எனக்கு உள்ளுணர்வு சொல்லுகிறது, நாம் தேடினால் இதுப் அக்பரின் கையெழுத்தா என்று கண்டுபிடித்துவிடலாம்.

ஜான்: நிச்சயமாக இது அக்பர் சொல்லியதன் படி எழுதப்பட்டதே.

நான்: அக்பரை யாரும் சந்தித்ததில்லை என்று நீங்கள் சொன்னீர்களே...

லட்சுமி: இப்போது கிடையாது, பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் சிலரோடு பேசியிருக்ககூடும்.

நான்: நீங்கள் அவரை மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராக சொன்னீர்கள். அவர் எப்படி உதவும் மனப்பான்மை கொண்டவர்? அவருக்கு மாருபட்டவரை உதைத்து துரத்தும் அவர் எப்படி மற்றவருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்?

லட்சுமி: அதைத்தான் அக்பர் விரும்புகிறார். அக்பர் சொல்லுவது எப்போது சரி.

நான்: உங்களுக்கு எப்படி தெரியும்?

லட்சுமி: ஏழாம் எண்ணில் சொல்லியபடி அக்பர் சொல்லுவது அனைத்தும் சரி, அது போதும் எனக்கு.

நான்: உங்களுடைய நண்பர் சங்கரன் இதை அனைத்தையும் உருவாகியிருக்கலாமே...

ஜான்: வாய்ப்பே இல்லை. பட்டியலின் ஐந்தாம் எண்ணின்படி அக்பரே இதை எழுதும்படி பணித்தார். இதைத்தவிர, இரண்டாம் எண்ணின்படி, சாராயத்தை கொஞ்சமாக பருகவேண்டும், நாலாம் எண்ணின்படி, சரியான முறையில் உணவருந்த வேண்டும், எண் எட்டின்படி, கழிப்பறை சென்றபின் கை கழுவ வேண்டும். எல்லோருக்கும் தெரியும் இவை அணித்தும் சரியென்று, எனவே, மீதம் உள்ள அனைத்தும் உண்மையாகவே இருக்க முடியும்.

நான்: ஆனால் எண் ஒன்பது சாராயத்தை பயன்படுத்தக்கூடாது என்றும் அது எண் இரண்டிற்கு மாறாகவும், எண் ஆறின்படி நிலவு வென்னைக்கட்டியால் உருவாக்கப்பட்டது என்பது நேரடியாக தவறாக தெரியவில்லையா?

ஜான்: எண் ஒன்பதிற்க்கும் இரண்டிற்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமல்ல, அது எண் ஒன்பதே தெளிவுபடுத்துகிறது. எண் ஆறை பொருத்தவரை, நீங்கள் நிலவுக்கு சென்றதே இல்லை, எனவே அதி பற்றி நிச்சயமாக நீங்கள் எதுவும் சொல்லமுடியாது.

நான்: அறிவியல் அறிஞர்கள், நிலவு என்பது பாறையால் உருவானது என்று நிருபிதிருத்கிறார்களே...

லட்சுமி: ஆனால் அந்த அறிவியல் அறிஞர்களுக்கு அந்த பாறை பூமியில் இருந்து வந்ததா? அல்லது விண்வெளியில் இருந்து வந்ததா என்பது தெரியாது, எனவே, அது வென்னைக்கட்டியாக கூட இருக்கமுடியும்.

நான்: நான் அதில் நிபுணன் இல்லையென்றாலும், நிலவு பூமியால் ஈர்க்கப்பட்டது என்பதையும் தள்ளுபடி செய்யமுடியாது. அதுதவிர, பாறை எங்கிருந்து வந்தது தெரியாது என்பதற்காக அதை வென்னைக்கட்டி என்பது சரியாகாது.

ஜான்: ஹஹஹ...இப்போது விஞ்ஞானிகள் தவறு செய்வார்கள் என்பதை ஒத்துக்கொண்டீர்கள்...ஆனால், நமக்கு அக்பர் சொல்லுவது எப்போதும் சரி என்பது தெரியும்.

நான்: நமக்குத் தெரியுமா?

லட்சுமி: நிச்சயமாக, எண் ஏழு அதை அதை தெளிவாக சொல்லுகிறது.

நான்: பட்டியல் சொல்லுவதால், அக்பர் சொல்லுவது எப்போதும் சரி என்று சொல்லுகிறீர்கள், ஏனென்றால், அது அக்பரால் எழுத பணிக்கப்பட்டது. அக்பர் சொல்லுவது சரி என்று அக்பர் சொல்லுவதால், இந்த சுற்றறிக்கை சரியானது என்று சொல்லுகிறீர்கள்.

ஜான்: இப்போதுதான் நீங்கள் புரிந்துகொண்டீர்கள். சுற்றிவளைத்து அக்பரின் சிந்தனையை சிலர் புரிந்துகொள்ளுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான்: அதை பற்றி கவலைப்படாதீர்கள்....அந்த இறைச்சி துண்டு குறித்து என்ன...

லட்சுமி கூச்சப்படுகிறாள்.

ஜான்: ரொட்டியில் உள்ள இறைச்சி சுவைக்காக அல்ல. இதுதான் அக்பரின் வழி. இதில் தவறிருக்கிறதா?

நான்: நமக்கு ரொட்டியே கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?

ஜான்: ரொட்டி இல்லை என்றால் இறைச்சி இல்லை. ரொட்டி இல்லாத இறைச்சி தவறு.

நான்: சுவையூட்டகூடிய எதுவும் இல்லையா?

லட்சுமி நம்பிக்கை அறிகுறியோடு பார்க்கிறாள்.

ஜான்: இதுபோன்ற பேச்சே தேவையற்றது...சுவை எந்த வகையிலும் தவறு....கத்துகிறார்.

நான்: அருமையாக துண்டாக்கப்பட்ட இறைச்சி துண்டு சுவையாக உள்ள இறைச்சி குறித்த பேச்சே இல்லையா...

லட்சுமி: இதை நான் காதால் கேட்கமாட்டேன். தன்னுடைய காதுகளை விரல்களை கொண்டு பொத்திக்கொள்கிறாள்.

ஜான்: இது அருவருப்பாகயிருக்கிறது. விலகிச் செல்லும் சாத்தான்கள்தான் அதை உண்ணுவார்கள்.

நான்: அது நல்லது, நான் அதை எப்போதும் உண்பேன்.

லட்சுமி: மயங்கி விழுகிறாள்.

ஜான்: லட்சுமியை தாங்கி பிடிக்கிறார். நீங்கள் இப்படிபட்ட ஒருவர் என்றால், இவ்வளவு நேரத்தை உங்களோடு வீனாக்கியிருக்கமாட்டேன். உங்களை அக்பர் உதைத்து வெளியேற்றும்போது, நான் அங்கிருப்பேன், என்னுடைய பணத்தை மகிழ்வோடு எண்ணிக்கொண்டிருபேன். இறைச்சி உண்ணும உங்களுக்காகவும் சேர்த்து நான் அக்பரின் குண்டியை முத்தமிடுவேன்.

இத்தோடு லட்சுமியை ஜான் தூக்கிக்கொண்டு வெளியேறி சென்றுவிட்டார். 

No comments:

Post a Comment