Tuesday 7 February 2012

எது இந்தி?

(12.10.11 அன்று முகநூலில் பதிந்தது)

எது இந்தி?

இந்தியும் உருதுவும் ஒன்றா? இந்தியும் சமஸ்கிருதமும் ஒன்றா?

எனக்கு தெரிந்த வரையில், வட இந்தியாவில் பேசும் இந்தியில், புழக்கத்தில் இருக்கும் இந்தியில், எழுபது சதவிகிதம் உருதுவும், சுமார் முப்பது சதவிகிதம் சமஸ்கிருதமும் கலந்த இந்திதான் இருக்கிறது.

இந்நிலையில், இந்திய அரசாங்கம் வைக்கும் அனைத்து பெயர்களிலும் புழக்கத்தில் இல்லாத சம்ஸ்கிருத வார்த்தைகளே வைக்கபடுவது ஏன்? அது ஒரு திட்டத்தின் பெயராக இருந்தாலும், நிறுவனத்தின் பெயராக இருந்தாலும், இந்திய அரசு இந்தி என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் வைப்பது ஏன்?

இந்தி அதிகம் புழங்கும் உத்திரபிரதேசத்திலேயே.....நீதிமன்றத்தை, கச்சேரி என்று மக்கள் அழைத்தாலும் பெயர்பலகையில் “நியாயாலை” என்று போடுவது ஏன்? மக்கள் உணவை கானா என்று அழைத்தாலும் போஜன் போஜானாலை போன்ற சொற்கள் ஏன்? இப்படி நான் நூற்றுக்கணக்கான சொற்களை எடுத்துகாட்டாக சொல்லமுடியும்.

அங்கு விளக்கம் கேட்டால்....இந்து தீவிரவாதிகள் சொல்லுகிறார்கள்...அவையெல்லாம் “சுத்த பாஷா” என்று.

அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்றால் சமஸ்கிருதம் சுத்த பாஷா ஆனால் உருது அசுத்த பாஷா என்று.

இப்போது சொல்லுங்கள் எது இந்தி என்று?     

இப்படி மெல்ல அரசின் உயர்பதவிகளில் அமர்ந்து இருக்கும் பார்ப்பன இந்து தீவிரவாதிகள்.....தங்களது வலைப்பின்னலை சரியாக பின்னி அதில் இந்தியா முழுவதும் உள்ள பார்ப்பன தீவிரவாதிகள் இணைந்து....தங்களது வேலையை சரியாக செய்கிறார்கள் என்பதை நானும் என்னைபோன்ற பெரியாரியவாதிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறோம்.

தமிழகத்திலும் அந்த சதியை சிறப்பாகவே செய்கிறார்கள் அந்த பார்ப்பனர்கள் தங்களின் வலைபின்னல் கூட்டத்தின் மூலமாக. அதன் விளைவாகத்தான் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை நாகரீகமாக இல்லை என்று சொல்லுகிறார்கள். அதற்கு எத்தனை சினிமாக்கள் பயன்பட்டன...எத்தனை நாவல்கள் பயன்பட்டன...எத்தனை தொடர்கதைகள் பயன்பட்டன...எத்தனை பத்திரிக்கைகள் பயன்பட்டன ……

அறிவில்லா தமிழர்கள்...வெட்கங்கெட்ட தமிழர்கள்....இந்தி என்ற பெயரில் பார்ப்பன மொழி மீது காதல் கொள்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு வட மொழியில் பெயர் வைக்கின்றனர் அதை நாகரீகம் என்று தவறாக நினைக்கின்றனர்.

No comments:

Post a Comment