Tuesday 7 February 2012

இந்தி எதிர்ப்பு போரில் நாம் தோல்வி அடைந்திருக்கிறோம்

இந்தி எதிர்ப்பு போரில் நாம் தோல்வி அடைந்திருக்கிறோம் (05.07.11 அன்று முகநூலில் பதியப்பட்டது)


1909 – இந்தியை கட்டயாமாக ஒவ்வொரு இந்திய குடிமகனும் கற்கவேண்டும் என்று காந்தி பேசினார்.

1916 – தென்னகத்தில் இந்தியை பரப்பும் நோக்கில் ‘தட்சிண பாரத் இந்தி பிரசார் சபா” காந்தியால் துவக்கப்பட்டது.

1917 – இந்தி ஒன்றுதான் இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் பொது மொழியாகவும் இருக்க தகுதி வாய்ந்தது என்று காந்தி தெரிவித்தார்.

1918 – தென்னிந்தியாவில் இந்தியை பரப்ப அனைத்து முயற்சிகளையும் முறைப்படி எடுக்கவேண்டும் என காந்தி பேசினார்.

1920 – தென்னிந்தியாவில் இந்தியை பரப்ப, ரூபாய் இருபதாயிரம் திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டில் வசூலிக்கப்பட்டது.

1920 – “திராவிடர்கள் இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்கள் பெரும்பான்மையினரின் மொழியான இந்தியை கட்டாயம் கற்றுகொண்டே தீரவேண்டும்” என்று “யங் இந்தியாவில்” காந்தி எழுதினார்.

1924 – அனைத்து சிறுவர் சிறுமியரும் இந்தியை கற்றுக்கொள்ளும் வகையில் கட்டாய பாடமாக்கவேண்டும், அடுத்த பத்தாண்டுகளில் இந்தி இந்தியாவின் பொதுமொழியாகிவிடும் என்று காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி பேசினார்.

1927 –  சென்னையில் நடைபெற்ற காங்கிரசின் மாநாட்டோடு, அகில இந்திய இந்தி மாநாடும் கூட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் அனைத்து சமுதாயத்தினரும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கவே இனத்தின் பிரசார் சபா நடத்தபடுகிறது என்று கவிக்குயில் என்றழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு சொன்னார்.

1934 , 1935, 1937 – சென்னை மாநகராட்சி மன்றத்தில் இருந்த காங்கிரஸ் உறுபினர்கள், மாநகராட்சி பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக்கபடவேண்டும் என்படஹி தீர்மானமாக நிறைவேற்றி மாகான அரசிற்கு அனுப்பினர். ஆனால் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி தள்ளுபடி செய்தது.

சூலை 1937 – வட இந்தியர்களை நன்கு அறிந்துகொள்ள, தென்னிந்தியர்களுக்கு இந்தி மொழி பற்றிய அறிவு மிகவும் பயன்படும். இந்தி மொழியை கட்டாய பாடமாக்கிடும் எண்ணத்திலேயே நான் இருக்கிறேன். புதிய இந்தி எழுத்துகளை மாணவர்கள் கற்றுகொள்ள தொடங்கினால், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளை வர்கள் எளிதில் பயில ஏற்பட்டுவிடும் என இந்தி பிரசார் சபாவிற்கு வந்த ராஜாஜி சொன்னார்.

ஆகஸ்ட் 1937  - இதே கருத்தை ராமகிருஷ்ணா மாணவர் இல்லத்திற்கு வந்த ராஜாஜி (அப்போது பிரிமியர் ஆகியிருந்தார்) சொன்னார்.

ஏப்ரல் 1938 – இந்தி கட்டாயம் என அரசாணையாக அறிவிக்கப்பட்டது.

சூன் 1955 – இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 344ம் விதிப்படி, இந்திய ஆட்சி மொழி ஆணைக்குழு ஒன்றை இந்திய குடியரசு தலைவர் நியமித்தார். அதன் வேலைகள் அனைத்தும் மத்திய அரசின் இந்தி திணிப்பு எண்ணத்தை வெளிபடுத்தின.

ஆகஸ்ட் 1959 -  இந்தி பேசாத மக்களுக்காக நேரு கொடுத்த உறுதி மொழி “ எவ்வளவு காலத்திற்கு மக்கள் விரும்புகிறார்களோ அதுவரையில் ஒரு மாற்று மொழியாக ஆங்கிலத்தை நான் வைத்திருப்பேன். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள்தான் முடிவெடுக்கவேண்டும்”.

ஏப்ரல் 1963 – நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்த்ரி ஆட்சி மொழி மசோதாவை கொண்டுவந்தார். அதன்படி, ஜனவரி 26 1965 முதல் இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழி.

மேலே குறிபிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும், நம் திராவிட மொழிகளுக்கு எதிராக எவ்வாறு ஒரு தொடர்ந்த திட்டமிடப்பட்ட சதி நடந்து என்பதற்கான வரலாறு.


இதற்கு முன்பு நடந்த இதற்கு பின்பு நடந்த இந்தி எதிர்ப்பு மற்றும் மொழிப்போர் பற்றி நான் அதிகம் தெரிவிக்கவேண்டியதில்லை. அது ஒரு உணர்வுபூர்வமான வீரப்போராட்டம்.

நான் சொல்லவருவது என்னவென்றால், நாம் மொழி போரில் வென்றோமா இல்லையா? என்பதை பற்றி...

இந்தி எதிர்ப்பு மற்றும் மொழி போரில் நாம் வென்றதாக கருதிக்கொண்டு மகிழ்ந்து என்பது ஒரு தற்காலிக சுகமே. நாம் அதில் தோற்றுபோனோம் என்பதே உண்மை.

நாம் அன்றும் சரி இன்றும் சரி, உணர்சிவசபடுதல் அல்லது உணர்சிவசபடுத்தபடுதல் ஆகிய இரண்டால் தூண்டப்பட்டு செயல்படுகிறவர்களாக இருகிறோம். நம் உணர்ச்சிகளை திருப்திபடுத்துவதன் மூலமாக நம் எதிரிகள் வெற்றிபெறுகிறார்கள் என்பதே உண்மை.

நான் உங்களுக்கு நேருவின் வார்த்தைகளை அதாவது அவரது உறுதிமொழியை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். ஏனென்றால், அது நம்மை திருப்திபடுத்திய உறுதிமொழி. அவற்றை நன்றாக கவனமாக படிக்கவும். இந்தி பேசாத மக்களுக்காக நேரு கொடுத்த உறுதி மொழி “ எவ்வளவு காலத்திற்கு மக்கள் விரும்புகிறார்களோ அதுவரையில் ஒரு மாற்று மொழியாக ஆங்கிலத்தை நான் வைத்திருப்பேன். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன். இந்தி பேசாத மக்கள்தான் முடிவெடுக்கவேண்டும்”.


நமது தீவிர போராட்ட உணர்வை கண்டு ஒன்றை நம் எதிரிகள் தெளிவாக புரிந்துகொண்டனர். அதாவது, நேரடியாக சட்டம் போட்டு இந்தியை திணிக்கமுடியாது என்பதை.

அவர்கள் வென்றது உண்மையா? நாம் தோற்றது உண்மையா?

பதில்: உண்மை உண்மை உண்மை.

எவ்வாறு நாம் தோற்கடிக்கப்பட்டோம்???!!!!

நம்மை சட்டத்தின் மூலமாக வழிக்கு கொண்டுவர இயலாத எதிரிகள், சதியின் மூலமாக வழிக்கு கொண்டுவந்தார்கள்.

எந்த திராவிட இயக்கம் அதன் கருத்துகளை பரப்ப திரைப்பட துறையை , எழுத்து துறையை பயன்படுத்தியதோ...அதையே அவர்களும் பயன்படுத்தினர்.

திரைபடத்தில், ஏழைகள் கிராமப்புறத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தமிழ் பெயர் வைத்திருப்பதும் அதே நேரத்தில், நகர மற்றும் பணக்கார கதாபாத்திரங்கள் வடமொழி பெயரை வைத்திருப்பதும் திரைப்படங்களின் வழக்கமாக மாற்றினர். அதே போல சிறுகதைகள், நாவல்கள் போன்றவற்றிலும் மாற்றினர். இந்த தொடர் சதியால், நம் தமிழ் மக்கள், தமிழில் பெயர் வைப்பதை வெறுக்க தொடக்கி, வடமொழியில் பெயர் வைப்பதை விரும்பதொடங்கினர் அவர்களை அறியாமலேயே.

ஒரு குறிப்பிட்ட காலத்தில், திரைபடத்தில், இயக்குனர் பாலச்சந்தர், இந்தி பாடல்களை தமிழ் படத்தில் பாடுவதுபோல் அமைத்தார். (இன்றும் இரண்டு தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தி பாடல்களை ஒளிபரப்புவது நடக்கிறது).

எந்த நகைச்சுவை கதாநாயகர்களான ஏன்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா போன்றவர்களால், திராவிட இயக்க கொள்கைகள் பரப்பபட்டனவோ...அதே நகைச்சுவை கதாபாத்திரங்களை மொத்த குத்தகை எடுத்தனர் சிலர்... அவர்கள்... ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வீ.சேகர் இப்படியாக பலர்... நினைவுபடுத்தி பார்த்தால் உங்களுக்கே தெரியும்.... கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு வரும் வரை (அதற்குள்ளாக அவர்கள் பணி முடிந்துவிட்டது).   

மெல்ல மத்திய அரசு பணிக்கு, இந்தி இன்றியமையாது என்ற நிலையால் மேலும் நம் மக்களை மாற்றினர்.

இவ்வாறாக நேரடியாக மோதமுடியாத நம் எதிரிகள், மறைமுகமாக, சமூக எண்ணத்தையே மாற்றி வெற்றிகண்டுள்ளனர். நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதையே தவறாக, அவமானமாக, கருதி கூச்சப்படும் அளவிற்கு மாற்றியுள்ளனர். உலகிலேயே, தங்கள் மொழியில் பெயர் வைக்க கூச்சப்படும் அதிசிய பிறவிகளாக தமிழர்களை மாற்றியதன் மூலமாக, எதிரிகள் வெற்றிபெற்றுள்ளனர் என்பதே உண்மை உண்மை உண்மை.

இந்த நிலையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில், முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஒரு புதிய சட்டசபை தீர்மானத்தை கொண்டுவந்தார், அதாவது, “தமிழை ஆட்சி மொழியாக கொண்டுவந்தால், நாங்கள் இந்தியை பாடமொழியாக எற்றுகொள்கிறோம்” என்று. இது ஒரு புதுவகை சதி. அதாவது, நீங்கள் மருந்து தந்தால், நாங்கள் நோய் கிருமியை எற்றுகொள்கிறோம் என்பதை போல.

மேலும் தமிழக முதலமைச்சராக இருந்த இருக்கிற ஜெயலலிதா, குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதில்லை.

இப்பொழுது சொல்லுங்கள் தோழர்களே.....நாம் வெற்றிபெற்றிருகிறோமா? அல்லது தோல்வியுற்றிருகிறோமா?


-          திராவிடப்புரட்சி

No comments:

Post a Comment