Tuesday 7 February 2012

டார்வின் தியரி உண்மையே

(23.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

கடவுள் பொய் என்று சொல்லுபவர்களுக்கு ஆண்டாண்டுகாலமாக நம்பிக்கையாளர்கள் நிரூபிக்கமுடியவில்லை. ஆனால், டார்வின் தியரி பொய் என சொல்லமுடியாது....அதன் தொடர்ச்சியாக....ஜீன் ஆராய்ச்சி தொடர்ந்து....மரபணு விந்தை வெளிவந்துவிட்டது. க்ளோனிங் நடைபெற்றுவிட்டது. செயற்கை உயிர் செல் உருவாக்கப்பட்டுவிட்டது. தற்போதைய மருத்துவ அறிவியல், மரபணு மாற்றத்தின் மூலமாக நோயை தவிர்க்கும் ஆராய்ச்சியில் உள்ளனர்.

கடவுளை வாழவைப்பதற்காக டார்வின் தியரி பொய் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள், பலரை முட்டாளாக்கிகொண்டிருந்தாலும்.....டார்வின் தியரி மனிதனை வாழவைக்கும் தியரி என்பது தொடர்ந்து நிருபிக்கப்பட்டுவருகிறது.

பள்ளியில், கல்லூரியில் உள்ள பாடத்திட்டங்களை திருத்த சொல்லுங்களேன்....டார்வின் தியரி தவறு என்று எழுதச்சொல்லுங்களேன். இதை யாரும் செய்யமாட்டார்கள், ஏனென்றால் அது அவர்களுக்குத் தெரியும் முடியாது என்பது.

டார்வின் தியரி அனைத்து கடவுள் கதைகளையும் பொய் என நிருபிக்கும் ஒன்று. எனவே டார்வின் தியரி பொய் என்று சொல்லிவருகின்றனர். ஆனால் அப்படி சொல்லுபவர்களால் டார்வின் தியரி பொய் என நிரூபிக்க முடியவில்லை. டார்வின் தியரி தொடர்ந்த பரிணாமவளர்ச்சியில் எங்கோ சென்றுகொண்டிருக்கிறது.

அறிவியல் சிந்தனை இல்லாத இடத்தில் மட்டும்தான் கடவுள் கதைகள் எடுபடும். அறிவியல் வளர வளர...கடவுள் காணாமல் போய்விடும். கடவுள் நம்பிக்கை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடவுள் நம்பிக்கை உள்ளது. ஆனால், அறிவியலில் ஒரு
நூற்றாண்டுகாலமாகத்தான் வளர்ந்திருக்கிறோம்...இன்னமும் வளர வேண்டியுள்ளது.

நூறாண்டுகளுக்கு முன்பு கடவுள் மீது இருந்த அதீத நம்பிக்கைக்கும் இப்போது உள்ள நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்ந்தால்....அதன் தொடர்ச்சி என்னவென்று எளிதாக புலப்படுகிறது.

- திராவிடப்புரட்சி

No comments:

Post a Comment