Tuesday 7 February 2012

ஆத்திகராக மாறுவது மிகவும் எளிது.

(30.12.11 அன்று முகநூலில் பதிந்தது)

ஆத்திகராக மாறுவது மிகவும் எளிது.

அதற்கு...

கடவுள் இருப்பதாகவும் கடவுளின் சக்தி குறித்தும் அடுத்தவர் சொல்லுவதை அப்படியே நம்பினால் போதும்.

பகுத்தறிவுவாளராக மாறுவது சிரமம்.

அதற்கு...

அதற்கு கடவுளின் இருப்பையும் அதன் சக்திகளையும் சோதித்துப்பார்க்கவெண்டும்.

ஆத்திகராக மாற்றுவது எளிது.

அதற்கு...

மனிதனின் அச்சத்தையும், இயலாமையையும் பயன்படுத்தினால் போதும்.

பகுத்தறிவுவாதியாக மாற்றுவது சிரமம்.

அதற்கு...

மனிதனின் சிந்தனையையும், தன்னம்பிக்கையையும், துணிவையும் தூண்டவேண்டும்.

இதனால்தான் ஆத்திகர்கள் அதிகமாகவும், பகுத்தறிவாளர்கள் குறைவாகவும் எண்ணிக்கையில் உள்ளனர்.

ஆனால், காலம் மாறிவருகிறது, அறிவியல் மனப்பான்மை பெருகிவருகிறது, பகுத்தறிவாளர்களும் பெருகிவருகின்றனர்.

உலகம் ஒருநாள் உண்மையை உணர்ந்து செயல்படும் நிலை வரும். அன்று மனிதர்கள் இயற்கையின் சக்தியையும், தன்னுடைய சக்தியையும் தெளிவாக புரிந்து செயல்படுவார்கள்.


- திராவிடப்புரட்சி  

No comments:

Post a Comment